search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kuruma Recipe"

    • உடலில் இருக்கும் கொழுப்புக்கள் கரைந்து எடை குறையும்.
    • குழந்தைகளுக்கு அதிகம் கொடுத்தால் எலும்புகள் வலுவடையும்.

    கொள்ளு உடலுக்கு மிகவும் வலிமையைத் தரும் உணவுப் பொருட்களில் ஒன்று. அத்தகைய கொள்ளுவை அடிக்கடி சாப்பிட்டால், உடலில் இருக்கும் கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடை குறையும். அதிலும் குழந்தைகளுக்கு அதிகம் செய்து கொடுத்தால், அவர்களது எலும்புகள் வலுவடையும். மேலும் கொள்ளுவை வைத்து இதுவரை ரசம் தான் செய்திருப்போம். ஆனால் இப்போது அந்த கொள்ளுவை வைத்து ஒரு குருமா செய்யலாம். அந்த கொள்ளு குருமாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    கொள்ளு - 1 கப்

    வெங்காயம் - 2

    உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது)

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    அரைப்பதற்கு

    வெங்காயம் - 1

    தக்காளி - 3

    வரமிளகாய் - 6

    மல்லி - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    இஞ்சி - 1 நீளத்துண்டு

    பூண்டு - 7 பல்லு

    தேங்காய் - 1/2 மூடி (துருவியது)

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    கசகசா - 2 டீஸ்பூன்

    செய்முறை:

    முதலில் மிக்சியில் வெங்காயம், தக்காளி, மல்லி, சீரகம், இஞ்சி, பூண்டு, தேங்காய் துருவல், கசகசா, வரமிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை உரித்து, அதனை நறுக்கிக் கொள்ளவும். பின்னர் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    அதன்பிறகுகொள்ளுவை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் அதனை குக்கரில் போட்டு, தேவையான தண்ணீர் ஊற்றி, வேக வைத்து, பின் அதில் உள்ள நீரை வடிகட்டி விட வேண்டும்.

    அடுப்பில் குக்கரை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, நன்கு மணம் வரும் வரை தொடர்ந்து வதக்க வேண்டும். வாசனை நன்கு வரும் போது, அத்துடன் உருளைக்கிழங்கு, வேகவைத்த கொள்ளு மற்றும் உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்க வேண்டும்

    இப்போது சுவையான கொள்ளு குருமா ரெடி. இதன் மேல் கொத்தமல்லியை தூவி, சாதத்துடன் பரிமாறலாம்.

    • வெள்ளை குருமாவை 10 நிமிடத்தில் மிக எளிதாக செய்துவிடலாம்.
    • சப்பாத்தி, பூரி போன்ற உணவுகளுக்கு மிகவும் சுவையாக இருக்கும்.

    எல்லா காய்கறி மற்றும் சிக்கன், மட்டன் ஆகியவற்றை வைத்து குருமா செய்திருப்போம். ஆனால் சற்று வித்தியாசமாக பேபிகார்ன் வைத்து ஒரு கிரீமியான ஒயிட் கிரேவி செய்யலாம். இந்த வெள்ளை குருமாவை வெறும் 10 நிமிடத்தில் மிக எளிதாக செய்துவிடலாம்.

    இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்ற உணவுகளுக்கு மிகவும் சுவையாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடியதாக இருக்கும். சரி வாங்க பேபிகார்ன் ஒயிட் கிரேவி எப்படி செய்யணும், இதற்கு என்ன பொருட்கள் எல்லாம் தேவைப்படும் போன்ற விவரங்களை நாம் இப்பொழுது பார்க்கலாம்...

    தேவையான பொருட்கள்:

    பேபி கார்ன் -5

    பட்டானி- 100 கிராம்

    தேங்காய்- ஒரு கப்

    கசகசா- ஒரு ஸ்பூன்

    சோம்பு ஒரு ஸ்பூன்

    உடைத்த கடலை- ஒரு ஸ்பூன்

    முந்திரி- 5

    பட்டர்- ஒரு ஸ்பூன்

    பட்டை-1

    லவங்கம்- 2

    சீரகம்- ஒரு ஸ்பூன்

    பச்சைமிளகாய்

    கொத்தமல்லித்தழை- ஒரு கைப்பிடி

    செய்முறை:

    முதலில் ஒயிட் கிரேவிக்கு செய்வதற்கு ஒரு மிக்சி ஜாரில் தேங்காய், கசகசா, சோம்பு, பச்சைமிளகாய், வெங்காயம், பச்சைமிளகாய், முந்திரி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் பட்டர் சேர்த்து அதில் பட்டை, லவங்கம், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

    பின்னர் வெட்டி வைத்துள்ள பேபிகார்னை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அதனுடன் பட்டானி, உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    அதனுடன் நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு கொதிக்க விட வேண்டும். ஒரு கிரேவி பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கினால் கிரீமியான பேபிகார்ன் ஒயிட் கிரேவி தயார். இதனை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்ற உணவுகளுக்கு சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

    ×