search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kotagiri area"

    கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பகுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் நில மேம்பாட்டு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பகுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் நில மேம்பாட்டு பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நெடுகுளா ஊராட்சி கன்னேரி மற்றும் கொணவக் கரை ஊராட்சி ஆனந்தகிரி, அண்ணாகாலனி, கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட கன்னிகாதேவி காலனி பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலைவசதி, தெருவிளக்கு, குடிநீர் வசதிகள் போன்றவைகள் உள்ளனவா என பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    மேலும் காக்காசோலை, கன்னேரி பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4.12 லட்சம் மதிப்பில் நிலமேம்பாட்டு பணியின் மூலம் தனிநபர் விவசாய நிலங்களில் உள்ள தேவையற்ற தாவரங்களை அகற்றும் பணியினை கலெக்டர் பார்வையிட்டு, இந்த நில மேம்பாட்டு பணியின் மூலம் தனிநபர் விவசாய நிலங்களை பராமரிக்க வசதியின்றி விவசாயம் செய்யாமல் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் நிலங்களை மேம்படுத்தி விவசாயம் செய்து பயன் பெறலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாரதி, கோல்டி சாராள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

    ×