search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kasimat"

    • பெரிய வகை மீன்களும் அதிக அளவில் கிடைத்து இருந்தது.
    • மீன்பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.

    ராயபுரம்:

    மிச்சாங் புயல் காரணமாக கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு 25 விசைப்படகுகள் மட்டுமே கரைக்கு திரும்பின. மேலும் மீன்கள் வரத்தும் குறைவாக இருந்தது.

    இந்த நிலையில் விடுமுறை நாளான இன்று ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 200 விசைப்படகு மீனவர்கள் இன்று அதிகாலை கரைக்கு திரும்பினர். மேலும் பெரிய வகை மீன்களும் அதிக அளவில் கிடைத்து இருந்தது.

    புயல், மழைக்கு பின்னர் இன்று அதிக அளவில் பெரிய மீன்கள் விற்பனைக்கு வந்ததால் மீன் வாங்க பொதுமக்கள், வியாபாரிகள் கூட்டம் அலை மோதியது. மீன்விலையும் கடந்த வாரத்தை விட இன்று 300 முதல் 350 வரை விலை அதிகமாக விற்கப்பட்டது.

    வஞ்சிரம் ரூ.1200, வெள்ளை வவ்வால் ரூ.1000 -வரைக்கு விலைபோனது. சங்கரா, சீலா, பெரிய இறால், நண்டு போன்ற மீன்கள் ரூ.100 முதல் ரூ.150 வரை விலை அதிகமாக இருந்தது.

    எனினும் மீன்பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். இதனால் காசி மேட்டில் மீன்விற்பனை நீண்ட நாட்களுக்கு பின்னர் களை கட்டியது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×