search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karma Vinyas"

    • உங்கள் பாவத்தை தல மரம் உள்வாங்கி கிரகித்துக் கொள்ளும்.
    • மரக்கன்று பூத்து, காய்க்கும் போது, உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாக துவங்கும்.

    உங்கள் நட்சத்திரத்துக்குரிய மரத்தை, நீங்களே உங்கள் கையால் நட்டு, நீரூற்றி வளர்த்தால் அந்த மரம் வளர, வளர உங்கள் வாழ்வில் ஆச்சரியப்படத்தக்க மாற்றங்கள் உண்டாகும்.

    உங்கள் பாவத்தை அந்த தல மரம் உள்வாங்கி கிரகித்துக்கொள்ளும். அது மட்டுமல்ல உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை இந்த மரங்கள் செய்யும்.

    சில மரங்களை வீட்டில் வளர்க்க முடியாது. உங்கள் தோட்டத்திலோ, சாலை ஓரங்களிலோ அல்லது ஆன்மீக தலங்களில் உள்ள வனப்பகுதியில் (சதுரகிரி, திருவண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம், பாபநாசம், குருவாயூர், திருப்பதி, திருத்தணி, சுவாமிமலை) தென்மேற்குப் பகுதியில் சூரிய கதிர்கள் படும் இடத்தில் நட வேண்டும். அந்த மரக்கன்றை அவரர் தங்களது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நல்லது.

    பிறகு நவதானியங்களை ஊற வைத்த தண்ணீரை அச்செடிக்கு விட்டு விட வேண்டும். நன்றாக ஊறிய நவதானியங்களை அந்த மரக்கன்றுக்கு உரமாகப் போட வேண்டும்.

    அந்த மரம் வளர, வளர அதை நட்டவரின் வாழ்க்கை மலரும். அதுமட்டுமின்றி அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்து விடும்.

    அம்மரக்கன்று பூத்து, காய்க்கும் போது, உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத் துவங்கும். அதாவது அவரது கர்ம வினைகள் நீங்கி இருக்கும். கர்ம வினைகளை விரட்ட விருட்ச சாஸ்திரத்தில் இப்படி ஒரு சிறப்பான வழிபாடு உள்ளது.

    வாய்ப்பு கிடைக்கும் போது இந்த பரிகாரத்தை செய்தால் தல விருட்சத்துக்குரிய ஒரு மரத்தை வளர்த்த புண்ணியம் கிடைக்கும். அதோட நம் வினைகளும் விலகி ஓடி விடும்.

    இந்த வழிபாட்டை செய்ய நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் எது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த விருட்சங்கள் வருமாறு:-

    அஸ்வினி - விருட்சம், பரணி - நெல்லி, கார்த்திகை - அத்தி, ரோகிணி - நாவல், மிருகசீரிஷம் - கருங்காலி, திருவாதிரை- செங்கருங்காலி, புனர்பூசம்-மூங்கில், பூசம் - அரசு, ஆயில்யம்- புன்னை மரம், மகம்- ஆலமரம், பூரம்- பலாசு, உத்திரம்-அலரி, அஸ்தம்-அத்தி, சித்திரை- வில்வம், சுவாதி- மருதை மரம், விசாகம்- விளாமரம், அனுஷம்- மகிழ மரம், கேட்டை- பராய்முருட்டு, மூலம்- மாமரம், பூராடம்- வஞ்சிமரம், உத்திராடம்- பலாமரம், திருவோணம்- எருக்கு, அவிட்டம்- வன்னி, சதயம்- கடம்புமரம், பூரட்டாதி- தேமா, உத்திரட்டாதி- வேம்பு, ரேவதி- இலுப்பை.

    ×