என் மலர்
நீங்கள் தேடியது "Kanchipuram industrialist kidnapping"
காஞ்சீபுரத்தில் தொழிலதிபரை கடத்தி சென்ற கும்பலை பிடிக்க மாவட்ட சூப்பிரண்டு தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை சேர்ந்த தொழில் அதிபர் பசூல் ரகுமானை நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பல் ரூ.50 லட்சம் கேட்டு காரில் கடத்தி சென்றனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் அவரை திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் பகுதியில் அவரை சாலை ஓரத்தில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
தப்பிய கடத்தல்காரர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி தலைமையில் காஞ்சிபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் வெற்றிசெல்வன், சின்ன காஞ்சிபுரம் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் மற்றும் காவல் துறையினரை ஆகியோர் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவருடன் காஞ்சீபுரம் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தப்பிய கடத்தல்காரர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி தலைமையில் காஞ்சிபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் வெற்றிசெல்வன், சின்ன காஞ்சிபுரம் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் மற்றும் காவல் துறையினரை ஆகியோர் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவருடன் காஞ்சீபுரம் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.






