என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kamal Haasan Politics"
அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளில் கொள்கை விளக்க பாடல்கள் மிகவும் பிரபலம்.
‘‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் பாடல் ஒலிக்காத அ.தி.மு.க. மேடையே இருக்காது. அதே போல ‘‘ஓடி வருகிறான் உதய சூரியன்’’ பாடலும் தி.மு.க. நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பப்படும் பாடல்களில் முக்கியமான பாடலாகும்.
இப்போதும் பட்டி தொட்டி யெங்கும் இந்த கட்சிகளின் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
எம்.ஜி.ஆர். தனது சினிமா பாடல்கள் மூலமாக மக்களை கவர்ந்தார். அரசியலில் குதித்த பின்னரும் அவரது புகழ் பாடும் பாடல்கள் மக்கள் மனதை தட்டி எழுப்பின.
தி.மு.க. கொள்கை விளக்க பாடல்களும் இதற்கு சளைத்தவை அல்ல. அ.தி.மு.க., தி.மு.க. 2 கட்சிகளும் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க பாடல்களும் ஒரு காரணம் என்றால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள்.
மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கிய கமல் தனது அதிரடி செயல்பாடுகள் மூலமாக கவனத்தை ஈர்த்து வருகிறார். புதிய கட்சியை கிராமங்கள் தோறும் கொண்டு செல்ல வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டுள்ள கமல் பல மடங்கு வேகத்தில் செயல்பட தொடங்கியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பதிவுக்காக டெல்லி சென்ற கமல் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோரை சந்தித்து பேசியதும், இதன் பின்னர் உறுவாகி இருக்கும் கூட்டணி யூகங்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இந்த நிலையில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 6 பாடல்கள் அடங்கிய ஆடியோ சி.டி. ஒன்று நேற்று வெளியிடப்பட்டது.
கமல் கட்சியில் இணைந்து செயல்படும் பிரபல கவிஞர் சினேகன் இந்த பாடல்களை எழுதி உள்ளார். பாடல் வரிகள் அனல் தெறிக்கும் வகையில் உள்ளது.
நாட்டுப்புற பாடல் மெட்டில் இசை அமைக்கப் பட்டுள்ள ‘‘நாட்டு நடப்பு சரியில்லடா’’ என தொடங்கும் பாடல் அ.தி.மு.க. அரசை கடுமையாக சாடி எழுதப்பட்டுள்ளது. பாடலில் இடம் பெற்றுள்ள வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது.
நாட்டு நடப்புசரியில்லடா. அத கேட்க எவனுக்கும் துணிவில்லடா. நிம்மதியா வாழ வழி இல்லடா. ஓட்டு வாங்கி போனவனெல்லாம் நடிக்கிறான். ஓட்டு போட்ட மக்கள் எல்லாம் துடிக்கிறான்.
இத தட்டி கேட்கும் தலைவன் யார்? இதோ வாராரு பாரு நம்மவரு.
இவன் போடாத வேஷம் இல்ல திரையில, இப்ப போராட வந்திருக்கான் தரையில. தலைவன் எல்லாம் மக்களுக்கு வேலைக்காரன்னு சொல்லுங்கடா.
வெள்ளை வேட்டி கட்டிக்கிட்டு கொள்ளை அடிக்கிறான். நாம வேதனய சொல்லப்போனா துரத்தி அடிக்கிறான். அரசியல் வியாபாரம்தான் நல்லாவே நடக்குது தமிழ்நாட்டுல. அதிகாரத்த கொடுத்துபுட்டு நாமதான் நிற்கிறோம் நடுரோட்டுல.
உழைக்கும் வர்க்கத்துக்கு இங்க பிழைக்க வழி இல்ல. ஊரையே ஏக்கிறாங்க. அவங்கள சட்டம் கண்டுக்கல. தேர்தலுன்னு வந்துட்டா தேடி வர்றாங்க. ஜெயிச் சுப்புட்டா காரு ஏறி ஓடிப் போறாங்க.
வேஷம் போடும் அரசியல் கும்பலை வெளியில் தூக்கி வீசுவோம். எங்கே ஊழல் நடந்த போதும் எதிர்த்து நின்று காட்டுவோம்.
வாடா... வாடா..... தோழா. நாளை நமதே. நமக்கென தலைவன் இருக்கிறான். நம்மை அவன் தான் அழைக்கிறான்.
எனக்குள் ஒருவன். உனக்குள் ஒருவன். நமக்குள் ஒருவன் எழுகிறான். எங்கும் ஊழல் எதிலும் ஊழல் தெரிந்தும் ஏனோ எதிர்க்கவில்லை.
நம்மால் அமைந்த அரசு நமக்கா? என்றும் தெரிய வில்லை. நம்மை சூழ்ந்த இருளை கிழித்து வெளிச்சம் தருவோம் வா தோழா.
நம்மவர் வழியில் நாமும் நடந்து மாற்றம் தருவோம் என்பது போன்ற வரிகளும் கவனிக்க வைக்கின்றன.
இந்த பாடல்கள் கமல் கட்சி கூட்டங்களில் இனி பட்டையை கிளப்பும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. #KamalHaasan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்