என் மலர்
நீங்கள் தேடியது "K. Rajanarayanan"
- சிந்தனையாளர் பேரவை சார்பில் 116-வது சிந்தனையரங்கம் நடைபெற்றது. புதுவை ஜோதி கண் மருத்துவமனை அரங்கில் மானுடத்தை நேசித்த மாமனிதர் கி.ரா. என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு சாரதா கங்காதரன் கல்லூரி பேராசிரியர் பிரபா தலைமை தாங்கினார்.
- புதுவையின் பழமை புதுமை என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.
புதுச்சேரி:
சிந்தனையாளர் பேரவை சார்பில் 116-வது சிந்தனையரங்கம் நடைபெற்றது. புதுவை ஜோதி கண் மருத்துவமனை அரங்கில் மானுடத்தை நேசித்த மாமனிதர் கி.ரா. என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு சாரதா கங்காதரன் கல்லூரி பேராசிரியர் பிரபா தலைமை தாங்கினார்.
பேரவை தலைவர் செல்வம் வரவேற்றார். துணை தலைவர் மணி மேகலை, பொருளாளர் சரஸ்வதி வைத்தியநாதன், துணை செயலாளர் ராஜாரங்கம், ஆலோசகர் ராமதாஸ் காந்தி, செயற்குழு உறுப்பினர் பச்சையம்மாள் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் கலியபெருமாள் சிறப்புரையாற்றினார். புதுவையின் பழமை புதுமை என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. எழுத்தாளர்கள் பிரபஞ்சன், கி.ரா. ஆகியோருக்கு நூலகத்தோடு கூடிய நினைவகங்கள் அமைக்க வேண்டும்.
அரசு பணியிடங்களை மேல்நிலை தேர்வில் தமிழ் கட்டாயம் படித்த புதுவையில் பிறந்தோருக்கு தலா 50 சதவீதம் நேரடி மற்றும் துறை ரீதியான பதவி உயர்வு என்ற முறையில் நிரப்ப வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் செயற்குழு உறுப்பினர் திவ்யா நன்றி கூறினார்.
- புதுவைப் பல்கலைக்கழகச் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தில் கி.ரா. அறக்கட்டளை சார்பில் கி.ராஜநாராயணனின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்வு கொண்டாடப்பட்டது.
- புலமுதன்மையர் சந்திரிகா தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
புதுவைப் பல்கலைக்கழகச் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தில் கி.ரா. அறக்கட்டளை சார்பில் கி.ராஜநாராயணனின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்வு கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழியற்புல முதன்மையர் சந்திரிகா, பேராசிரியர்கள் கருணாநிதி, ரவிக்குமார், பழனிவேலு,.தனலட்சுமி, சிலம்பு நா. செல்வராசு, பக்தவத்சல பாரதி, சம்பத், வெங்கட சுப்புராய நாயகர், எழுத்தாளர்கள் சீனு.தமிழ்மணி, புதுவை இளவேனில், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், முதுகலை மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புலமுதன்மையர் சந்திரிகா தலைமை தாங்கினார். கி.ராஜநாராயணனின் நினைவுகளைப் பேராசிரியர், பக்தவத்சல பாரதி, இரா.சம்பத், பழனிவேலு, சீனு.தமிழ்மணி உள்ளிட்டோர் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியை பேராசிரியர் ரவிக்குமார் ஒருங்கிணைத்தார்.நிகழ்ச்சியை பட்ட ஆய்வாளர் யூசுப் ஷெரிப் தொகுத்து வழங்கினார்.






