search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "joshimath"

    • இதுவரை 169 குடும்பங்களைச் சேர்ந்த 589 பேர் இங்கிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • பேரழிவு ஏதேனும் இருந்தால், மக்களைக் கவனிப்பது அரசின் கடமை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத், 'புதையும் நகரமாக' மாறியிருக்கிறது. அங்குள்ள வீடுகள், கடைகள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் நகரவாசிகள் பீதி அடைந்துள்ளனர்.

    இதுவரை 169 குடும்பங்களைச் சேர்ந்த 589 பேர் இங்கிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், பேரிடர் பாதித்த ஜோஷிமத் நகரத்தின் நிலைமை மிகவும் ஆபத்தானது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

    இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், "உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் பகுதியில் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தபோதும் தேவையான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை? ஜோஷிமத்தில் தற்போதைய நிலைமை மிகவும் ஆபத்தானது. அதற்கு மலைநகரில் வசிப்பவர்கள் பொறுப்பல்ல. பேரழிவு ஏதேனும் இருந்தால், மக்களைக் கவனிப்பது அரசின் கடமை.

    மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

    ×