என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "John de Brito"
- ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டு ஜெபம் செய்தனர்.
- கொடி இறக்கம், நற்கருணை ஆசீர் நடைபெற்றது.
திருவாடானை தாலுகா ஓரியூரில் புனித அருளானந்தர் புனிதர் பட்டம் பெற்ற 76-ம் ஆண்டு விழா, திருத்தல பங்கு உருவாகிய 80-ம் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது.
3 நாட்கள் நடைபெற்ற இந்த ஆலய திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக ஆடம்பர கூட்டு திருப்பலியை செங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியின் அதிபர் ஹென்றி ஜெரோம் தலைமையில் அருட்தந்தையர்கள் நிறைவேற்றினர். அதனை தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் புனித அருளானந்தர், கன்னிமரியாள், தூய மிக்கேல் அதிதூதர் பவனியாக சென்று இறை மக்களுக்கு ஆசீர் வழங்கினர். இதில் ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டு ஜெபம் செய்தனர்.
நேற்று நன்றி திருப்பலியை அருட்தந்தையர்கள் சைமன் ராஜ், மரிய தேன் அமிர்தராஜ், அலெக்சாண்டர் ஆகியோர் நிறைவேற்றினர்.மாலை ஒரியூர் பங்குத்தந்தை ஆல்பர்ட் முத்துமாலை தலைமையில் கொடி இறக்கம், நற்கருணை ஆசீர் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை பங்கு இறை மக்கள், பங்கு பேரவையினர், பங்கு கிராம தலைவர்கள், இயேசு சபை குழுமத்தினர், அருட் சகோதரிகள் செய்து இருந்தனர்.
- திருவாடானை தாலுகா ஓரியூரில் புனித அருளானந்தர் திருத்தலம் உள்ளது.
- இந்த ஆலயத்தில் 400-வது ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
திருவாடானை தாலுகா ஓரியூரில் புனித அருளானந்தர் திருத்தலம் உள்ளது. இங்கு புனித அருளானந்தர் புனிதர் பட்டம் பெற்ற 75-வது ஆண்டு பவள விழா, புனித அருளானந்தரின் 375-ம் ஆண்டு பிறந்தநாள் விழா, புனித இன்னாசியார் புனித சவேரியார் ஆகியோர் புனிதர் பட்டம் பெற்ற 400-வது ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவை இயேசு சபையின் சென்னை மறைமாநில தலைவர் ஜெபமாலை ராஜா கொடியேற்றி தொடங்கி வைத்தார். இதில் இயேசு சபை மதுரை மறை மாநிலத்தலைவர் அருட்தந்தை டெனிஸ் பொன்னையா, ஓரியூர் கலைமனைகளின் அதிபர் அருட் தந்தை ஆல்பர்ட் முத்துமாலை தலைமையில் அருட்தந்தையர்கள் திருவிழா திருப்பலியை நிறைவேற்றினர். அதனைத் தொடர்ந்து திருவிழா சப்பர பவனி நடைபெற்றது.
இதில் புனித அருளானந்தர், புனித இன்னாசியார் புனித சவேரியார் ஆகியோர் பவனியாக வந்து பக்தர்களுக்கு இறை ஆசீர் வழங்கினர். இதை தொடர்ந்து சிவகங்கை மறைமாவட்ட ஆயர் (பொறுப்பு) அருட்தந்தை ஸ்டீபன் அந்தோணி 116 குழந்தைகளுக்கு புது நன்மை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்