search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewellery recovering"

    உடுமலையில் ஸ்டேட் பாங்க் காலனியில் திருட்டு போன 89 பவுன் நகைகளை மீட்ட போலீசாருக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பொன்னாடை அணிவித்து கவுரவ படுத்தினார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஸ்டேட் பாங்க் காலனியில் வசித்து வருபவர் வெற்றிவேலன் இவர் கடந்த மே மாதம் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த போது அவரது வீட்டில் சுமார் 22 லட்சம் மதிப்புள்ள 89 பவுன் நகை கொள்ளை போனது . அதன் அடிப்படையில் உடுமலை போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் வெற்றி வேலன் என்பவரது வீட்டில் கொள்ளையடித்த ஷாலு என்பவரை கைது செய்து பதுக்கி வைத்திருந்த 89பவுன் தங்க நகைகளையும் தனிப்படை போலீசார் கைப்பற்றினர்.

    அதன் அடிப்படையில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் மற்றும் அதிகாரிகளை ஊக்கப்படுத்தும் விதமாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பொன்னாடை அணிவித்து கவுரவ படுத்தினார். இவ்விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×