search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Islamic State claims response"

    தஜிகிஸ்தான் நாட்டில் வெளிநாட்டு சைக்கிள் ஓட்ட வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதற்கு ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர் என அமாக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
    துஷான்பே:

    அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த சைக்கிள் ஓட்ட வீரர்கள் சிலர் தஜிகிஸ்தான் நாட்டில் சுற்றுலா பயணிகளாக சென்று கொண்டிருந்தனர். தலைநகர் துஷான்பேயின் தென்கிழக்கே சைக்கிளில் சென்ற அவர்கள் மீது அங்கு வந்த கார் ஒன்று வேகமாக மோதியது. இதில் நால்வரும் தூக்கி வீசப்பட்டனர். மேலும், அவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதலும் நடத்திவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. 

    இந்த தாக்குதலில் அமெரிக்காவை சேர்ந்த 2 பேரும், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்தை சேர்ந்த 2 பேரும் என மொத்தம் 4 பேர் பலியாகினர். மற்றவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தஜிகிஸ்தானில் வெளிநாட்டு சைக்கிள் வீரர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்று உள்ளனர். ஆனால் அதற்கான ஆதாரங்களை வெளியிடவில்லை என அமாக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
    ×