search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Information about taking soil without permission"

    • மண் கடத்தியதால் நடவடிக்கை
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் வட்டம் பள்ளூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் அனுமதியின்றி மண் எடுப்பதாக ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது.

    பின்னர் கலெக்டரின் உத்தரவின் பேரில் நேற்று மாலை அரக்கோணம் தாசில்தார் சண்முக சுந்தரம் தலைமையில் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட குழுவினர் பள்ளுர் கிராமத்தில் அனுமதியின்றி மண் எடுத்துக் கொண்டிருந்த 3 டிப்பர் லாரிகளை கைப்பற்றி நெமிலி போலீஸ் நிலைத்தில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து தாசில்தார் அளித்த புகாரின் பேரில் நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியின் உரிமையாளர் யார்? தப்பியோடிய நபர்கள் யார்? என விசாரனை நடத்தி வருகின்றனர்.

    ×