என் மலர்
நீங்கள் தேடியது "Indian Couples Arrested"
- பிரபல கம்பெனி பெயரில் இந்திய தம்பதிகள் மோசடியை செய்து வந்தனர்.
- குறிப்பாக மின் வினியோகம் செய்யும் கம்பெனியை ஏமாற்றியதாக அந்த நிறுவனம் புகார் தெரிவித்தது.
ஜோகன்ஸ்பர்க்:
சவூதி அரேபியாவில் வசித்து வரும் இந்திய தம்பதிகளான முகமது-ரசீசா மொய்தீன் மற்றும் வெர்னன்-ஆராதனா ஆகியோர் பல்வேறு மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.
பிரபல கம்பெனி பெயரில் அவர்கள் இந்த மோசடியை செய்து வந்தனர். குறிப்பாக மின் வினியோகம் செய்யும் கம்பெனியை ஏமாற்றியதாக அந்த நிறுவனம் புகார் தெரிவித்தது.
இதையடுத்து ஜோகன்ஸ்பர்க் மற்றும் துர்பான் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து அவர்களை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து எலெக்ரானிக் பொருட்கள் மற்றும் உதிரி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.






