search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hoax threat"

    • 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.
    • இதில் 11 பள்ளிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    குஜராத் மாநிலத்தில் நாளை 26 தொகுதிகளில் 25-ற்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. பல பள்ளிக்கூடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் இன்று அகமதாபாத்தில் உள்ள 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் மூலம் விடுக்கப்பட்டுள்ளது. இந்த 16 பள்ளிக்கூடங்களில் 11 பள்ளிக்கூடங்களில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    இதனைத் தொடர்ந்து மிரட்டல் வந்துள்ள பள்ளிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சந்தேகத்திற்குரிய வகையிலான எந்த பொருட்களும் கைப்பற்றப்படவில்லை. பின்னர், அது போலி மிரட்டல் எனத் தெரியவந்தது.

    சமீபத்தில் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு மிரட்டல் வந்தது. அதேபோன்றுதான் தற்போது இங்கேயும் மிரட்டல் வந்துள்ளது. மெயில்கள் ரஷியாவில் பயன்படுத்தப்படும் "mail.ru" மூலம் அனுப்பப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய எந்த பொருட்களும் சோதனையில் கண்டுபிடிக்கப்படவில்லை. இது போலியான மிரட்டில் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது என கிரைம் பிரிவு இணை கமிஷனர் ஷரத் சிங்கால் தெரிவித்துள்ளார்.

    இந்த இ-மெயில் தகவலை புறந்தள்ளிவிட்டு, மக்கள் பயமின்றி நாளை வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    ×