search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GROCERY STORE ROBBERY"

    • சரண்ராசித் தனது வீட்டின் அருகாமையில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பட்டியில் வைத்திருந்த ரூ. 65 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் பண்டல்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது

    திருச்சி,

    திருச்சி தஞ்சாவூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சரண்ராசித் (வயது 46). இவர் தனது வீட்டின் அருகாமையில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.வழக்கம் போல் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார். மறுநாள் காலையில் கடையை திறக்க சென்ற போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பட்டியில் வைத்திருந்த ரூ. 65 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் பண்டல்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இது தொடர்பாக சரண் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஜான் பீட்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சி பெரிய கடை வீதி முத்தழகு பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 57). இவர் திருச்சி பெரிய கடைவீதி கள்ளர் தெரு பகுதியில் ஸ்டுடியோ நடத்தி வந்தார்.

    வழக்கம் போல் மாலையில் ஸ்டுடியோவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் காலையில் சென்று பார்த்தபோது ஸ்டுடியோவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது கேமரா, அதன் சார்ஜர் ஃப்ளாஷ் இன்னொரு சாதாரண கேமரா, பேட்டரி உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது.

    இது தொடர்பாக சந்திரசேகரன் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோபால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    ×