என் மலர்
நீங்கள் தேடியது "Graphics Movie"
- குழந்தைகளை ரசிகர்களாக கொண்ட கிராபிக்ஸ் படம்
- ஆரம்ப காலத்திலிருந்தே எடுக்க நினைத்தப் படம்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் மதராஸி. இதில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் தான் இயக்கப்போகும் அடுத்த படம் குறித்து பேசியுள்ளார் முருகதாஸ்.
இயக்குநர்கள் ராம், மாரி செல்வராஜ், கிருத்திகா உதயநிதி, அஸ்வந்த் மாரிமுத்து ஆகியோருடன் இணைந்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசியுள்ளார். அப்படம்தான் தான் முதலில் இயக்கவேண்டும் என நினைத்த படம் என்றும், அது ஒரு கிராபிக்ஸ் படம், அதில் குரங்கு தான் மெயின் ரோல், அது குழந்தைகளுக்கானது எனவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர்,
"நான் எனது அடுத்தத் திரைப்படத்தை குரங்கை முதன்மை கதாபாத்திரமாகக் கொண்டு (கிராபிக்ஸ் படம்) இயக்கத் திட்டமிட்டுள்ளேன். இதுவே எனது முதல் படமாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்த படம், நான் உதவி இயக்குநராகப் பணியாற்றிய காலத்திலிருந்தே இந்த எண்ணம் என்னிடம் இருந்தது. இந்தப் படம் முக்கியமாக குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்படும்." என தெரிவித்துள்ளார்.






