search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gotabhaya Rajapaksa"

    போர் குற்றங்கள் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இலங்கை முன்னாள் ராணுவ மந்திரி கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என இன்று அறிவித்துள்ளார். #GotabhayaRajapaksa #presidentialpolls #Lankapresidentialpolls
    கொழும்பு:

    இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தமிழர்களை கொன்று குவித்த உச்சக்கட்ட போரை நிகழ்த்தியபோது அவரது தம்பி  ராணுவ மந்திரி கோத்தபய ராஜபக்சே அந்நாட்டின் ராணுவ மந்திரியாக பொறுப்பு வகித்தார்.

    முள்ளிவாய்க்காய் போரின்போது பல்லாயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட சதியில் கோத்தபய ராஜபக்சேவின் சதி முக்கியமானதாக கருதப்பட்டது. அவருக்கு எதிராக பல்வேறு போர் குற்றச்சாட்டு மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ளன.

    தற்போது கனடா நாட்டில் வாழும் பாதிக்கப்பட்டவர் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது.



    மேலும் தனது தந்தையை கோத்தபய ராஜபக்சே கொன்று விட்டதாக பிரபல பெண் பத்திரிகையாளரான அஹிம்சா விக்ரமதுங்கா என்பவர் தொடர்ந்த வழக்கின் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

    இலங்கையை சேர்ந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு அமெரிக்காவிலும் நிரந்தர குடியுரிமை உண்டு. இலங்கை அதிபர் பதவிக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சமீபகாலமாக அமெரிக்காவில் தங்கியிருந்த கோத்தபய ராஜபக்சே இன்று இலங்கை திரும்பினார்.

    தலைநகர் கொழும்புவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, அதிபர் தேர்தலில் போட்டியிடுதற்கு வசதியாக எனது அமெரிக்க குடியுரிமை விட்டுத்தருவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறேன் கோத்தபய ராஜபக்சே தெரிவித்தார். #GotabhayaRajapaksa #presidential polls #Lankapresidentialpolls
    இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கொல்ல சதி திட்டம் தீட்டியிருப்பது பற்றி தெரியும் என கூறிய இந்தியர் கைது செய்யப்பட்டார். #SrilankanPresident #MaithripalaSirisena
    கொழும்பு:

    இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவையும், முன்னாள் ராணுவ மந்திரியும், ராஜேபச்சே தம்பியுமான கோத்தபய ராஜபக்சேவையும் கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்புத்துறை அதிகாரி நமல் குமாரா தெரிவித்தார்.

    இந்த தகவலை பயங்கரவாத விசாரணை பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி நலாகா டி. சில்வா தன்னிடம் இதுபற்றி கூறியதாகவும் தெரிவித்தார்.

    இவர் தன்னிடம் பேசிய ஆடியோ ஆவணத்தை சி.ஐ.டி. பிரிவு போலீசாரிடம் குமாரா ஒப்படைத்தார். அதை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் எம்.தாமஸ் என்ற இந்தியர் குமாரா வீட்டுக்கு சென்று இருந்தார்.

    இவர் இந்த சதி திட்டம் குறித்து தனக்கு தெரியும் என அவரிடம் கூறினார். அதையடுத்து தாமசை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை காவலில் வைத்து விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் ஊழல் தடுப்புத் துறை அதிகாரி நமல்குமாரா மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவு முன்னாள் தலைமை அதிகாரி நலாசா டி சில்வா பேசிய ஆடியோவின் உண்மை தன்மையை ஆராயுமாறு சி.ஐ.டி. பிரிவு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

    கைது செய்யப்பட்ட இந்தியர் தாமஸ் சுற்றுலா விசாவில் இலங்கை சென்றிருந்தார். ஆனால் அவர் குறிப்பிட்ட நாளைவிட அதிக காலம் அங்கு சட்ட விரோதமாக தங்கியிருப்பதாகவும், குமாராவுடன் தொடர்பில் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. #SrilankanPresident #MaithripalaSirisena
    ×