search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "google ceo sundhar pichai"

    • கற்றல் மற்றும் அறிவைப் போற்றும் குடும்பத்தில் வளரும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.
    • என்னை வடிவமைத்த நாட்டினால் இந்த வகையில் கௌரவிக்கப்படுவது நம்பமுடியாத அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

    இந்தியா என்னில் ஒரு பகுதி, நான் எங்கு சென்றாலும் அதை என்னுடன் எடுத்துச் செல்வேன் என்று கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

    இந்திய-அமெரிக்கரான சுந்தர் பிச்சைக்கு வர்த்தகம் மற்றும் தொழில் பிரிவில் 2022ம் ஆண்டிற்கான பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. மதுரையில் பிறந்த இவருக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் விருது பெற்ற 17 பேரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்நிலையில், சுந்தர் பிச்சைக்கு நேற்று சான் பிரான்சிஸ்கோவில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருது வழங்கப்பட்டது.

    விருது பெற்ற சுந்தர் பிச்சை பின்னர் பேசியதாவது:-

    இந்த மகத்தான கவுரவத்திற்காக இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வடிவமைத்த நாட்டினால் இந்த வகையில் கௌரவிக்கப்படுவது நம்பமுடியாத அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

    இந்தியா என்னில் ஒரு பகுதி. நான் எங்கு சென்றாலும் அதை என்னுடன் எடுத்துச் செல்கிறேன். இந்த அழகான விருதைப் போல், நான் எங்காவது பாதுகாப்பாக வைத்திருப்பேன்.

    கற்றல் மற்றும் அறிவைப் போற்றும் குடும்பத்தில் வளரும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. என் பெற்றோர் எனது ஆர்வங்களை ஆராய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக நிறைய தியாகம் செய்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×