search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girls student"

    10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள தொளார்குடிகாடை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் ஜெயா(வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. இதில் ஜெயா தேர்ச்சி அடையவில்லை. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகைக்கு சென்று தூக்குப்போட்டார். இதைபார்த்த அவரது சகோதரர் சத்தம்போட்டு அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

    மயங்கிய நிலையில் ஜெயாவை மீட்டு இருந்த அவரை சிகிச்சைக்காக திட்டக்குடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்த்திரிக்கு அவர் அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×