search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free model Exam"

    • கள்ளக்குறிச்சியில் இலவச மாதிரி தேர்வு -வேலை வாய்ப்பு முகாம் கலெக்டர் ஸ்ரீதர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • இளைஞர்கள் இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் செய்தி குறிப்புகளை வெளியிட்டுள்ளார் அதில் கூறியுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு ப்பணியாளர் தேர்வா ணையத்தால் 7,301 பணியிட ங்களுக்கான (கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர்) டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, இத்தேர்வு வருகிற 24-ம் தேதியன்று நடைபெறவுள்ளது. எனவே, மேற்காணும் போட்டித் தேர்வுக்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வர்கள் பயனடையும் வகையில் அதற்கான இலவச மாதிரி தேர்வுகள் 10.07.2022 மற்றும் 17.07.2022 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் சேலம் மெயின் ரோடு, இந்திலியில் அமைந்துள்ள ஆர்.கே.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளது.

    இந்த மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 விண்ணப்ப நகல் மற்றும் புகைப்படத்துடன் 08.07.2022 அன்று மாலை 5 மணிக்குள் கள்ளக்குறிச்சி, 18/63 நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலோ அல்லதுhttp://shorturl.at/fJSZ3 என்ற உரலி வழியாகவோ (கூகுள் பார்ம்) பதிவு செய்து கொண்டு, 10.07.2022 அன்று நடைபெறவுள்ள இலவச மாதிரி தேர்வுகளை எழுதி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள மற்றொரு செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, தனியார்துறை நிறுவனங்கள் மூலம் சிறிய அளவிலான "வேலைவாய்ப்பு முகாம்" மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது பணிக்காலியிடம் மற்றும் கல்வித்தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளதால், பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்துகொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் CANDIDATE LOGIN-ல் தங்களது விபரங்களை பதிவு செய்துகொண்டு, இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.

    இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும், 08.07.2022 அன்று காலை 10.00 மணி முதல் கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், சிறு, குறு மற்றும் தனியார் தனியார்துறை நிறுவனங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை தங்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரிலோதேர்வு செய்யவுள்ளனர். எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்தி க்கொள்ளலாம் இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×