search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Forcibly Kisses"

    • இதுதொடர்பான சிசிடிவி காட்சி வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    • மருத்துவமனைக்கு முள்வேலி அமைக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை

    பாட்னா:

    பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டம் சதார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் சுகாதார பணியாளர் ஒருவரை மர்ம நபர் ஒருவர் வலுக்கட்டாயமாக முத்தமிட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 10ம் தேதி அந்த பெண், மருத்துவமனையின் பின்பகுதியில் தனியாக சென்றபோது, திடீரென பின்னால் இருந்து வந்த நபர் வலுக்கட்டாயமாக முத்தமிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

    பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், மருத்துவமனையின் காம்பவுண்டு சுவர் மிகவும் உயரம் குறைவாக இருப்பதால் குற்றவாளிகள் சுவர் ஏறி குதித்து உள்ளே வந்துவிடுவதாகவும், முள்வேலி அமைத்து மருத்துவமனைக்கு வரும் பெண்களை பாதுகாக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளி சீரியல் கிஸ்சராக இருக்கலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு முன்பு பல பெண்களை இதுபோன்று வலுக்கட்டாயமாக முத்தமிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.

    ×