search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Five student death"

    உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் சரயு ஆற்றில் குளிக்கச் சென்ற 5 மாணவர்கள் நீரில் மூழ்கி பலியானார்கள்.
    கோரக்பூர்:

    உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் சரயு ஆற்றில் குளிக்கச் சென்ற 5 மாணவர்கள் நீரில் மூழ்கி பலியானார்கள்.

    ஹோலி பண்டிகையையொட்டி, சொந்த கிராமத்துக்கு வந்திருந்த அவர்கள், ஆற்றில் குளித்தபோது இச்சம்பவம் நடந்தது. முதலில், இதை அறியாத அவர்களது குடும்பத்தினர், அவர்களை தேடி சென்றபோது, ஆற்றங்கரையில் உடைகளும், செல்போனும் கிடந்தன. அதைப் பார்த்து, அவர்கள் பலியானதை அறிந்தனர்.

    பலியானவர்களின் பெயர்கள் சத்யம் (வயது 14), சவுரவ் (19), நிதேஷ் (16), அமன் (17), ஆதர்ஷ் (23) என்று தெரியவந்துள்ளது.
    ×