search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "father police complaint"

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கடைக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து அவருடைய தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மேலராதாம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் சுலோக்சனா (வயது 22). இவர் திருப்பூரில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    விடுமுறையையொட்டி தனது சொந்த ஊரான மேலராதாம்பூருக்கு சுலோக்சனா வந்தார். பின்னர் கடைக்கு சென்று வருவதாக தனது பெற்றோரிடம் கூறி விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் சுலோக்சனாவை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து காட்டு மன்னார்கோவில் போலீசில் சுலோக்சனாவின் தந்தை செந்தில்குமார் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் வழக்குபதிவு செய்து மாயமான சுலோக்சனாவை தேடி வருகிறார்.
    ×