search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "family help"

    போலி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டவர் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    மதுரை:

    விருதுநகர் பாண்டியன்நகர் தங்கமணி காலனியைச்சேர்ந்த வாலிபர் சுந்தரமூர்த்தி என்பவர் கடந்த 2009-ம் ஆண்டு என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    என்கவுன்டர் என்ற பெயரில் தனது கணவரை சுட்டுக்கொன்ற அப்போதைய சிவகாசி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், போலீஸ்காரர்கள் காமராஜ், சிவா, கருணாகரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுந்தரமூர்த்தியின் மனைவி வசந்தி மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.

    மனுவை விசாரித்த நீதிபதி துரைஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை வைத்து பார்க்கும்போது என்கவுன்டர் என்ற பெயரில் மனுதாரரின் கணவர் சுட்டுக்கொல்லப்பட்டது தெரிகிறது. இது மனித உரிமை மீறல் ஆகும்.

    எனவே மனுதாரருக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் மீதும் குற்ற வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.

    இந்த விசாரணை நியாயமாக நடக்க அவர்கள் 4 பேரையும் பணியிடைநீக்கம் செய்ய வேண்டும். மேலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

    இந்த வழக்கை முறையாக விசாரிக்காத சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டருக்கு எதிராகவும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறை செயல்பாட்டால் நிகழும் மரணங்கள் தொடர்பாக உடனடியாக மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    ×