என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Fake lottery cheating"
புதுச்சேரி:
புதுவை சண்முகாபுரத்தில் ஒரு வீட்டில் போலி லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் கோரிமேடு போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு போலி லாட்டரி சீட்டுகள் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்திய பிரிண்டர்கள், லேப்-டாப்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் போலி லாட்டரி சீட்டு தயாரிப்பில் ஈடுபட்ட ஸ்ரீராம் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.
இந்த சமூக விரோத தொழிலில் தொடர்புடைய குண்டு பாளையத்தை சேர்ந்த பொதுப்பணித்துறை ஊழியர் ராதா (42), குயவர் பாளையத்தை சேர்ந்த எம்ப்ளாய்மென்ட் ரமேஷ் (42), திலாஸ்பேட்டையை சேர்ந்த விக்னேஸ்வரன் (42) ஆகிய 3 பேரும் தலைமறைவாக இருந்து வந்தனர்.
இந்த நிலையில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் நேற்று தலைமறைவாக இருந்து வந்த பொதுப்பணித்துறை ஊழியர் ராதா உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்