search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "employee missing"

    கருங்கல் அருகே வேலைக்கு சென்ற தொழிலாளி மாயமானது குறித்து அவரது மனைவி போலீசில் புகார் செய்தார். போலீசார் தொழிலாளியை தேடி வருகிறார்கள்.
    கருங்கல்:

    கருங்கல் அருகே உள்ள கண்ணன்விளையை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 46). கூலி தொழிலாளி. இவருக்கு அமுதா என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர்.

    கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவர் பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் பல இடங்களில் தேடியும், எங்கும் அவர் கிடைக்கவில்லை. எனவே இது குறித்து அமுதா கருங்கல் போலீசில் புகார் செய்தார். 

    புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து மாயமான சீனிவாசனை தேடி வருகின்றனர்.
    ×