என் மலர்
நீங்கள் தேடியது "dye industry"
வட மாநில மக்களின் ரசனை மாற்றத்தால் சென்னிமலை பகுதியில் சாயப் பட்டறை தொழில் பாதிப்படைந்து வருகிறது. ஆனால் துணி பிரிண்டிங் பட்டறை தொழிலுக்கு மவுசு கூடியுள்ளது.
சென்னிமலை:
சென்னிமலை பகுதியில் கைத்தறிகளிலும், விசைத் தறிகளிலும் அதிக அளவில் பெட்ஷீட்டுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை உள்நாட்டு தேவைகளுக்கு மட்டும் இன்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
ஆரம்ப காலத்தில் இங்கு குழி தறிகளில் தான் பெட்ஷீட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டது பின் அவை சட்டதறிகளாக (மக்கம்) மாற்றப்பட்டது. மக்களின் ரசனை மாற்றத்திற்கு தகுந்தாற்போல் மாறி பல வண்ணங்களில் பல ரக டிசைன்களில் உற்பத்தி செய்ய ஜாக்காடு தறிகளாக மாற்றப்பட்டது. பின்பு இவைகளின் 60 சதவீத உற்பத்தியை விசைதறிகள் அபகரித்து கொண்டது.
சென்னிமலை சுற்று பகுதியில் இன்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது இதில் 10 சதவீதம் தறிகள்தான் ஏற்றுமதி ரக துணி உற்பத்தியில் ஈடுபடுகிறது. மற்ற 90 சதவீத துணிகள் தறிகள் 10ம் நெம்பர் நூலை பயன்படுத்திதான் பெட்ஷீட்டுகள் தயார் செய்யப்படுகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பல வண்ணங்களில் சென்னிமலை பகுதியில் உள்ள சாயபட்டறைகளில் சாயமிடப்பட்டு அவைகள் வட மாநில மக்களின் மனதை கவரும் வகையில் கலர் மேட்ச் செய்து பெட்ஷீட்டுகள் தயார் செய்து அனுப்பி வந்தனர் இதனால் சென்னிமலை பகுதி சாயப்பட்டறைகளுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு இருந்தது. இதனால் சாய பட்டறை தொழிலும் பெருகி சென்னிமலை சுற்று வட்டார பகுதிகளில் 50-க்கும் அதிகமான சாய பட்டறைகள் இயங்கி வந்தது.
இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக வட மாநிலங்களில் பல வண்ணங்களில் சாயம்மிடப்பட்ட நூலை பயன்படுத்தி தயாராகும் பெட்ஷீட்களை மக்கள் விரும்பி வாங்கும் நிலை குறைந்து விட்டது. தற்போது வெள்ளை கலரில் நெசவு நெய்து பல வண்ணங்களில் பிரிண்ட் செய்யும் ரகங்களை தான் வட மாநில மக்கள் விரும்புகின்றனர்.
மேலும் சென்னிமலை பகுதியில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களும் பனியன் வேஸ்ட் கார்டன் மூலம் தயார் ஆகும் கலர் கோன் நூல்களை வாங்கி அதில் பெட்ஷீட்கள் உற்பத்தி செய்ய தொடங்கி விட்டனர்.
மெல்ல மெல்ல பிரிண்டிங் பெட்ஷீட்களுக்கு மவுசு கூடி இந்த ஆண்டு அதிக அளவு பிரிண்டிங் பெட்ஷீட்டுகள் தான் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
இதனால் சாயபட்டறை தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வடமாநில மக்களின் ரசனை மாற்றத்தால் சென்னிமலை பகுதியில் சாய பட்டறை தொழிலுக்கு நெருக்கடி நிலவுகிறது.
அதே சமயம் பிரிண்டிங் பட்டறைகளுக்கு கூடுதல் வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளது. பெட்ஷீட்களுக்கு பிரிண்ட் செய்யும் பட்டறைகள் சென்னிமலை பகுதியில் அதிகம் இல்லை.
அதிக அளவில் ஈரோட்டில் கொடுத்துதான் பெட்ஷீட்களுக்கு பிரிண்ட் செய்து வாங்கி வருகின்றனர். வடமாநில மக்களின் ரசனை மாற்றம் மற்றும் கலர் கோன் நூல் ஆதிக்கத்தால் சென்னிமலைசாயப் பட்டறை தொழில் பாதிப்படைந்து வருகிறது. இதை நம்பி உள்ள தொழிலாளர்கள் வேதனையில் உள்ளனர்.
சென்னிமலை பகுதியில் கைத்தறிகளிலும், விசைத் தறிகளிலும் அதிக அளவில் பெட்ஷீட்டுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை உள்நாட்டு தேவைகளுக்கு மட்டும் இன்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
ஆரம்ப காலத்தில் இங்கு குழி தறிகளில் தான் பெட்ஷீட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டது பின் அவை சட்டதறிகளாக (மக்கம்) மாற்றப்பட்டது. மக்களின் ரசனை மாற்றத்திற்கு தகுந்தாற்போல் மாறி பல வண்ணங்களில் பல ரக டிசைன்களில் உற்பத்தி செய்ய ஜாக்காடு தறிகளாக மாற்றப்பட்டது. பின்பு இவைகளின் 60 சதவீத உற்பத்தியை விசைதறிகள் அபகரித்து கொண்டது.
சென்னிமலை சுற்று பகுதியில் இன்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது இதில் 10 சதவீதம் தறிகள்தான் ஏற்றுமதி ரக துணி உற்பத்தியில் ஈடுபடுகிறது. மற்ற 90 சதவீத துணிகள் தறிகள் 10ம் நெம்பர் நூலை பயன்படுத்திதான் பெட்ஷீட்டுகள் தயார் செய்யப்படுகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பல வண்ணங்களில் சென்னிமலை பகுதியில் உள்ள சாயபட்டறைகளில் சாயமிடப்பட்டு அவைகள் வட மாநில மக்களின் மனதை கவரும் வகையில் கலர் மேட்ச் செய்து பெட்ஷீட்டுகள் தயார் செய்து அனுப்பி வந்தனர் இதனால் சென்னிமலை பகுதி சாயப்பட்டறைகளுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு இருந்தது. இதனால் சாய பட்டறை தொழிலும் பெருகி சென்னிமலை சுற்று வட்டார பகுதிகளில் 50-க்கும் அதிகமான சாய பட்டறைகள் இயங்கி வந்தது.
இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக வட மாநிலங்களில் பல வண்ணங்களில் சாயம்மிடப்பட்ட நூலை பயன்படுத்தி தயாராகும் பெட்ஷீட்களை மக்கள் விரும்பி வாங்கும் நிலை குறைந்து விட்டது. தற்போது வெள்ளை கலரில் நெசவு நெய்து பல வண்ணங்களில் பிரிண்ட் செய்யும் ரகங்களை தான் வட மாநில மக்கள் விரும்புகின்றனர்.
மேலும் சென்னிமலை பகுதியில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களும் பனியன் வேஸ்ட் கார்டன் மூலம் தயார் ஆகும் கலர் கோன் நூல்களை வாங்கி அதில் பெட்ஷீட்கள் உற்பத்தி செய்ய தொடங்கி விட்டனர்.
மெல்ல மெல்ல பிரிண்டிங் பெட்ஷீட்களுக்கு மவுசு கூடி இந்த ஆண்டு அதிக அளவு பிரிண்டிங் பெட்ஷீட்டுகள் தான் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
இதனால் சாயபட்டறை தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வடமாநில மக்களின் ரசனை மாற்றத்தால் சென்னிமலை பகுதியில் சாய பட்டறை தொழிலுக்கு நெருக்கடி நிலவுகிறது.
அதே சமயம் பிரிண்டிங் பட்டறைகளுக்கு கூடுதல் வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளது. பெட்ஷீட்களுக்கு பிரிண்ட் செய்யும் பட்டறைகள் சென்னிமலை பகுதியில் அதிகம் இல்லை.
அதிக அளவில் ஈரோட்டில் கொடுத்துதான் பெட்ஷீட்களுக்கு பிரிண்ட் செய்து வாங்கி வருகின்றனர். வடமாநில மக்களின் ரசனை மாற்றம் மற்றும் கலர் கோன் நூல் ஆதிக்கத்தால் சென்னிமலைசாயப் பட்டறை தொழில் பாதிப்படைந்து வருகிறது. இதை நம்பி உள்ள தொழிலாளர்கள் வேதனையில் உள்ளனர்.






