என் மலர்
நீங்கள் தேடியது "Dr. Sivanthi Aditanar Girls High School"
- வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் கே. சந்திரமோகன் தலைமையில் பாராட்டுவிழா நடைபெற்றது.
- பள்ளி தலைமை ஆசிரியை ஜெக ஜோதி மற்றும் உதவி தலைமை ஆசிரியை சித்ராஜெயசிலி முன்னிலை வகித்தனர்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் சாத்துமாநகர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் மண்டல அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. மொத்தம் 46 பள்ளிகளின் அணிகள் பங்கேற்றன.
இதில் மணலியில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் சீனியர் பிரிவில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினர்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் கே. சந்திரமோகன் தலைமையில் பாராட்டுவிழா நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியை ஜெக ஜோதி மற்றும் உதவி தலைமை ஆசிரியை சித்ராஜெயசிலி முன்னிலை வகித்தனர்.
விழாவில் மணலி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரம் கலந்து கொண்டு மாணவிகளுக்கு தங்கப்பதக்கத்தை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் மணலி சேக்காடு பொது வியாபாரிகள் சங்க நிறுவன தலைவர் ஏ.தங்கம், சென்னை வாழ் நாடார் சங்க துணை செயலாளர் செல்லத்துரை, சமத்துவ மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் மணலி பாலா,மணலி சேக்காடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் காளியப்பன், செயலாளர் பாண்டியன், ஆலோசகர் மாடசாமி கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆசிரியர் சுஜாதா வரவேற்றார். முடிவில் நாடார் உறவின் முறை பொதுச்செயலாளர் அரிஹரன் நன்றி கூறினார்.






