என் மலர்
நீங்கள் தேடியது "DNA isolation"
சர்வதேச அறிவியல் திருவிழாவில் ஒரே நேரத்தில் அதிகமானோர் டிஎன்ஏ (மரபணு) பகுப்பாய்வு செய்து லக்னோ பள்ளி மாணவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். #IISF2018
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் சர்வதேச அறிவியல் திருவிழா நடந்து வருகிறது. நேற்று இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக லக்னோவில் உள்ள கோயங்கா பள்ளியை சேர்ந்த 550 மாணவர்கள் ஒரே நேரத்தில் வாழைப்பழத்தில் இருந்து டிஎன்ஏவை எடுத்து பகுப்பாய்வு சோதனை செய்தனர்.
ஒரே நேரத்தில் அதிகமான பேர் டிஎன்ஏ பகுப்பாய்வு சோதனை செய்தது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. முன்னதாக அமெரிக்காவின் சியாட்டில் மாநிலத்தில் 302 மாணவர்கள் சோதனை செய்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.







