search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dindigul protest"

    திண்டுக்கல்லில் பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் முள்ளிப்பாடி டாஸ்மாக் குடோன் முன்பு திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட தலைவர்கள் எல்.பி.எப். மாரிமுத்து, சி.ஐ.டி.யு. ராமு, ஏ.ஐ.டி.யு.சி. அருணாச்சலம் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில குழு உறுப்பினர் கோபால், மாவட்ட செயலாளர்கள் எல்.பி.எப். கருப்பையா, சி.ஐ.டி.யு. சீனிவாசன், ஏ.ஐ.டி.யு.சி. மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் எல்.பி.எப். மாநில பேரவை தலைவர் பசீர்அகமது, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் சிவமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். 15 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், ரூ.18 ஆயிரம் அடிப்படை சம்பளமாக நிர்ணயம் செய்ய வேண்டும், ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு தர வேண்டும், மேலும் டாஸ்மாக் மதுபாட்டில்கள் தனியார் காண்டிராக்ட் லாரி மூலம் கொண்டு வரப்படுகிறது.

    ஒரு மது பாட்டில் பெட்டியை டாஸ்மாக் கடையில் இறக்க ரூ.5 கேட்டு மிரட்டுகின்றனர். இதற்கு தீர்வு காணவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பப்பட்டன.
    ×