search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dilip Kumar"

    இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம்வந்த பழம்பெரும் நடிகர் திலிப் குமார்(95) உடல் நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #DilipKumar
    அந்தாஸ், மதுமதி, தேவதாஸ், முகல்-இ-ஆஸம், கங்கா ஜமுனா உள்ளிட்ட பல்வேறு இந்தி திரைப்படங்களில் நடித்தவர் திலிப் குமார். இவரது நடிப்பில் வெளியான ராம் அவுர் ஷியாம் என்ற திரைப்படத்தை தழுவி எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படம் வெள்ளிவிழா கண்டு சாதனை படைத்தது.



    பாலிவுட் முன்னாள் கதாநாயகி சாய்ரா பானுவை திருமணம் செய்த திலிப் குமார், கடைசியாக 1998-ம் ஆண்டில் வெளியான ‘கிலா’ படத்தில் நடித்திருந்தார். 60 ஆண்டுகால திரையுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மும்பையில் உள்ள வீட்டில் பூரண ஓய்வெடுத்து வந்த திலிப் குமார், நேற்றிரவு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    மூச்சுத்திணறல் மற்றும் சளி சார்ந்த உபாதைகளுக்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

    இந்திய சினிமாத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் பாபா சாகேப் பால்கே விருதை 1994-ம் ஆண்டிலும், மத்திய அரசின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மவிபூஷன் விருதினை கடந்த 2015-ம் ஆண்டும் திலிப் குமார் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #DilipKumar
    பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் உடல்நலக் குறைவால் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நலம் தேறிவருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். #DilipKumar
    இந்தி நடிகர் திலீப்குமார் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமாருக்கு (95 வயது) கடந்த 5-ந் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மும்பை பாந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் திலீப்குமாருக்கு நெஞ்சில் நோய் தொற்று இருப்பது தெரியவந்தது.

    மருத்துவ நிபுணர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தநிலையில், திலீப்குமாருக்கு லேசான நிமோனியா காய்ச்சல் பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது. இதை அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்தார். இதையடுத்து, டாக்டர்கள் திலீப்குமாரை அவசர பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.


    கோப்பு படம்

    இதுபற்றி அந்த மருத்துவமனையின் துணை தலைவர் கூறுகையில், ‘சிகிச்சைக்கு பின்னர் திலீப்குமாரின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அவசர சிகிச்சை பிரிவில் இருந்தாலும், அவர் நலமுடன் இருக்கிறார். டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்’ என்றார். #DilipKumar

    ×