search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dams rise"

    • பைக்காரா, கல்லட்டி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • ஊட்டி, மஞ்சூர், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    ஊட்டி,

    நீலகிரி ஊட்டி, தொடர் மழை எதிரொலியாக நீலகிரியில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது

    நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது.

    குறிப்பாக ஊட்டி, மஞ்சூர், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பதிவாகி வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. வனப்பகுதிகளில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து அணைகளில் சேகரமாகி வருகிறது.

    இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடு, கிடு வென உயர்ந்து வருகிறது. தற்போது தொடர் மழை பெய்வதால் சில அணைகள் நிரம்பும் தருவாயில் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. நீலகிரியில் மின்வாரியம் கட்டுப்பாட்டில், 13 அணைகள் உள்ளன. தற்போது 90 சதவீதம் வரை தண்ணீர் இருப்பு உள்ளது.

    பைக்காரா அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில், நீர்மட்டம் 88 அடியாகவும், 210 அடி கொள்ளளவு கொண்ட அப்பர்பவானி அணையின் நீர்மட்டம் 190 அடியாகவும், போர்த்திமந்து அணையின் மொத்த கொள்ளளவான 130 அடியில், நீர்மட்டம் 115 அடி ஆகவும், 171 அடி கொள்ளளவு கொண்ட அவலாஞ்சி அணையின் நீர்மட்டம் 162 அடி ஆகவும் உயர்ந்தது.

    எமரால்டு அணையின் மொத்த கொள்ளளவான 184 அடியில் தற்போது நீர்மட்டம் 174 அடி, கெத்தை அணையின் மொத்த கொள்ளளவு 156 அடியில் நீர்மட்டம் 154 அடியாக அதிகரித்து உள்ளது. 18 அடி கொள்ளளவு கொண்ட முக்குறுத்தி அணையின் நீர்மட்டம் 16 அடியாகவும், காமராஜ் சாகர் அணையின் கொள்ளளவான 49 அடியில் 42 அடியாகவும், 89 அடி கொள்ளளவு கொண்ட பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் 88 அடியாகவும், கிளன்மார்கன் அணையின் கொள்ளளவான 33 அடியில் 26 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.

    அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால், நிரம்பும் பட்சத்தில் பாதுகாப்பு கருத்தி உபரிநீர் வெளியேற்றப்படும். தொடர் மழையால் பைக்காரா மற்றும் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.  

    ×