என் மலர்
நீங்கள் தேடியது "Dalit Rights Protection Movement"
கன்னியாகுமரியில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அம்பேத்கர் சிலை முன் நேற்று காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஒரு பெண் ஊழியருக்கு அந்த துறையின் உயர் அதிகாரி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியும், எனவே சம்பந்தப்பட்ட அதிகாரியை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு மாநில செயலாளர் ஜெய்சிங் தலைமை தாங்கினார். மாநில தலைவர் தினகரன், குமரி அலெக்ஸ், சுகின்ராபிக், அருளானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆனால் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த 18 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்ட தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அம்பேத்கர் சிலை முன் நேற்று காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஒரு பெண் ஊழியருக்கு அந்த துறையின் உயர் அதிகாரி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியும், எனவே சம்பந்தப்பட்ட அதிகாரியை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு மாநில செயலாளர் ஜெய்சிங் தலைமை தாங்கினார். மாநில தலைவர் தினகரன், குமரி அலெக்ஸ், சுகின்ராபிக், அருளானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆனால் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த 18 பேரையும் போலீசார் கைது செய்தனர்.






