என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cricketers Face two Year"

    உள்ளூர் கிரிக்கெட் தொடரில் முறைகேடாக வயது சான்றிதழ் வழங்கி விளையாடுவது தெரியவந்தால் இரண்டாண்டு தடைவிதிக்கப்படும் என வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
    பிசிசிஐ-யால் ஏராளமான உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இளைஞர்கள் பெரும்பாலானோர் போலி வயதுச் சான்றிதழ் கொடுத்து அணியில் சேர்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுகுறித்து ஏற்கனவே டிராவிட் கவலை தெரிவித்திருந்தார். மேலும் இப்படி சேரும் வீரர்களுக்கு மூன்று ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.



    இந்நிலையில் இதுபோன்று தவறுகள் செய்யும் இளைஞர்களுக்கு இரண்டாண்டு தடைவிதிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ள நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

    அத்துடன் இதற்கு உதவியாக இருக்கும் நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×