search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chikungunya virus"

    கிருமாம்பாக்கம் பகுதியில் மேலும் 6 பேர் சிக்குன்குன்யாவால் பாதிக்கப்பட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    பாகூர்:

    புதுவை கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார் குப்பத்தில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சலால் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் காய்ச்சல், உடல் வலியால் அவதி அடைந்து வந்த நிலையில் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    இதையடுத்து பிள்ளையார் குப்பம் கிராமத்தில் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து முகாம் அமைத்து சுகாதார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

    ஆனால், மர்ம காய்ச்சலால் மேலும் பலர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரியை ஆய்வு செய்தபோது அதில் பலருக்கு சிக்குன்குன்யா காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று வரை சிக்குன்குன்யாவால் பாதிக்கப்பட்ட 21 பேர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் பிள்ளையார் குப்பம் காலனியை சேர்ந்த குப்பம்மாள், சந்திரா, ஆனந்தாயி, பத்திரியம்மாள், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் சிக்குன்குன்யாவால் பாதிக்கப்பட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பிள்ளையார் குப்பம் கிராமத்தில் தொடர்ந்து சிக்குன்குன்யா காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு வருவதால் அந்த கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்
    ×