search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chennai people happy"

    வாட்டி, வதைத்த வெயிலுக்கு இதமாக இன்று பிற்பகல் சென்னை நகரின் பல பகுதிகளில் பெய்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். #rainsbringrespite #Chennairains
    சென்னை:

    தமிழ்நாட்டில் கோடைக்காலம் கடந்த பின்னரும் கத்திரி வெயில் காலம் போல் செப்டம்பர் மாதம் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதற்கிடையில் தமிழகத்தின் சில பகுதிகளில் நேற்று பரவலான மழைப்பொழிவு ஏற்பட்டது.

    இந்நிலையில், இன்று பிற்பகல் மூன்று மணியில் இருந்து தென்சென்னை, வடசென்னை மற்றும் மத்திய சென்னைக்கு உட்பட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக, செங்குன்றம், ஈக்காட்டுத்தாங்கல், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், எழும்பூர், வேப்பேரி ஆகிய பகுதிகளில் சுமாரான மழைப்பொழிவு உள்ளது. இந்த மழையால் தட்பவெப்ப நிலையில் இருந்த வெப்பம் மாறி, குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவிவதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இன்று மாலை சுமார் 7 மணிவரை மழை தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ள தகவல் அவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது. #rainsbringrespite #Chennairains
    ×