search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Celebration of Republic Day"

    மாவட்டம் முழுவதும் குடியரசு தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. சிவகங்கையில் கலெக்டர் ஜெயகாந்தன் தேசிய கொடியை ஏற்றினார்.
    சிவகங்கை:

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மைதானத்தில் குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மைதானத்திற்கு காலை 8 மணிக்கு கலெக்டர் ஜெயகாந்தன் வந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் வரவேற்றார். பின்பு 8.05 மணியளவில் கலெக்டர் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

    பின்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, வருவாய்த்துறை, தொழில் வணிகத்துறை, தொழிலாளர் நல அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மகளிர் திட்டம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட துறைகளின் மூலம் மொத்தம் 105 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 27 லட்சத்து 54 ஆயிரத்து 980 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 41 போலீசாருக்கு தமிழக முதல்-அமைச்சரின் விருதை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சக்திவேல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, தொழிலாளர் நலத்துறை அலுவலர் மைவிழிச்செல்வி, துணை இயக்குனர் யசோதாமணி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அப்துல்கபூர், மனோகர், சக்கரவர்த்தி, முருகேசன், சிவகங்கை தாசில்தார் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    சிவகங்கை ரமண விகாஷ் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் முத்துகண்ணன் தலைமையில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றினார். விழாவில் நேரு இளைஞர் மைய முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இடையமேலூர் விக்னேஷ்வரா வித்யாலயா பள்ளியில், பள்ளி செயலாளர் ஜானகி தலைமையில் ராணுவ வீரர் முருகேஸ்வரன் தேசிய கொடிய ஏற்றினார். முடிவில் ஆசிரியை ஜான்சி நன்றி கூறினார். சிவகங்கை அருகே உள்ள நடேசன் செட்டியார் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலட்சுமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

    மேட்டுபட்டி சுவாமி விவேகானந்தா மேல்நிலைபள்ளியில் பள்ளி முதல்வர் மலர்விழி தலைமையில் திருமலை அய்யனார் தேசிய கொடிய ஏற்றிவைத்தார், பள்ளி செயலர் தனலெட்சுமி முதுதுகலை ஆசிரியர் பிரேம்குமார், அஜீத்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். சிவகங்கை கிராமதான நிர்மான சங்கத்தில் பொது செயலாளர் உறுமத்தான் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

    சிவகங்கை ஆக்ஸ்வர்டு மேல்நிலைபள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு தாளாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பள்ளி செயலர் சியாமளா மற்றும் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை ராமகிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை விஜயா தலைமையில் ஜஸ்டீன் திரவியம் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

    சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் பள்ளிச்செயலர் சேகர் தலைமையில் தேவகோட்டை கல்வி மாவட்ட கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தலைமையாசிரியர் முத்துக்குமார் வரவேற்றார். விழாவில் மாவட்ட அரிமா சங்கத் தலைவர் சுந்தரமாணிக்கம், வக்கீல்கள் ராம்பிரபாகர், அப்துல்கபூர், பாலச்சந்திரன், விஜய்ஆனந்த், பாண்டிக்கண்ணன், கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் ஆசிரியர் ராஜு நன்றி கூறினார்.

    சிவகங்கை கற்பூரசுந்தரபாண்டியன்-ராமலட்சுமி மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் பொக்கிசம் தேசிய கொடியை ஏற்றினார். கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு தமிழர் பண்பாட்டு இனிப்பு உணவான கடலை உருண்டை, எள்ளு உருண்டை வழங்கப்பட்டன. துணியாளான தேசியகொடி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

    காரைக்குடி ஸ்ரீராம் நகர் திருச்சி பை-பாஸ் ரோட்டில் அமைந்திருக்கும் பிரதமரின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மையமான யூனிவர்சல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, திருவள்ளுவர் கல்வி மற்றும் கிராம மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் குடியரசு தினவிழா நடைபெற்றது. விழாவில் நிறுவனத் தலைவர் விஸ்வநாத கோபாலன் தேசியகொடி ஏற்றி வைத்தார். நிறுவன இயக்குனர் லயன் ஆதினம், மேலாளர் செந்தமிழ்செல்வன், சொக்கலிங்கம், மகாலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் உள்பட மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. 
    ×