search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car chase"

    • இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதி காரை நிறுத்தாமல் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
    • சுமார் இரண்டு மணி நேரம் கார் சேசிங் நடைபெற்றது.

    பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் தம்பதி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில், பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதி நியூ யார்க் நகரில் நடைபெற்ற அறக்கட்டளை ஒன்றின் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்றனர். நிகழ்ச்சி முடிந்து அங்கிருந்த கிளம்ப ஆயத்தமான ஹாரி மற்றும் மேகன் தம்பதியை புகைப்பட கலைஞர்கள் துரத்தியதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதி காரை நிறுத்தாமல் அங்கிருந்து கிளம்பி சென்றனர். இவர்களுடன் மேகனின் தாயாரும் பயணம் செய்திருக்கிறார். சுமார் இரண்டு மணி நேரம் கார் சேசிங் நடைபெற்றதாக இளவரசர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட தகவல்களில் அரை டஜன் கார்கள் சேசிங்கில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இறுதியில் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்படும் சூழல் உருவானது. எனினும், ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது. 

    இதே போன்று 1997 ஆம் ஆண்டு புகைப்பட கலைஞர்கள் படம் எடுப்பதற்காக வாகனத்தை துரத்திய போது ஏற்பட்ட கோர விபத்தில் ஹாரியன் தாயார் இளவரசி டயானா பலியானது குறிப்பிடத்தக்கது.

    மெக்சிகோ நாட்டில் இருந்து அத்துமீறி அமெரிக்க எல்லையை தாண்டியவர்களின் காரை அமெரிக்க எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் விரட்டி பிடித்த போது நிகழ்ந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். #MexicoUnitedStatesborder
    வாஷிங்டன் :

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து 90 மைல் தொலைவில் அமைந்துள்ள, மெக்சிகோ - அமெரிக்க எல்லையில், நேற்று அமெரிக்க போலீஸ் அதிகாரிகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அத்துமீறி 3 கார்கள் மெக்சிகோ எல்லையை கடப்பதை கண்டுபிடித்தனர்.

    அவர்களை கடத்தல்காரர்கள் என்று சந்தேகித்த போலீஸ் அதிகாரிகள், மூன்று கார்களையும் துரத்திப் பிடிக்க முயன்றனர். அதில், இரண்டு கார்களை விரட்டி பிடித்த அதிகாரிகள், அதில் இருந்தவர்களை கைது செய்தனர்.

    ஆனால், மூன்றாவது கார் மட்டும் நிற்காமல் செல்லவே அமெரிக்க அதிகாரிகள் விடாமல் அந்த காரை துரத்திச் சென்றனர். 14 பேருடன் சென்ற அந்த கார் மணிக்கு சுமார் 160 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென விபத்தில் சிக்கியது.

    இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். விபத்துக்குள்ளான காரை ஓட்டி சென்ற ஓட்டுனரை அதிகாரிகள் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். #MexicoUnitedStatesborder
    ×