search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "byelection results"

    • ஜேஎம்எம் வேட்பாளர் சுமார் 1,35,480 வாக்குகளையும், என்.டி.ஏ வேட்பாளர் யசோதா தேவி சுமார் 1,18,380 வாக்குகளையும் பெற்றனர்.
    • ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ. இவரது மனைவி பேபி தேவி.

    ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதைதொடர்ந்து இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.

    இதில், திரிபுராவில் உள்ள தன்புர், போக்சாநகர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இந்நிலையில், ஜார்க்கண்டில் உள்ள கிரிதி மாவட்டத்தில் உள்ள தும்ரி சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் ஜே.எம்.எம் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி) வேட்பாளர் பேபி தேவி 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) வேட்பாளர் யசோதா தேவியை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

    ஜேஎம்எம் வேட்பாளர் சுமார் 1,35,480 வாக்குகளையும், என்.டி.ஏ வேட்பாளர் யசோதா தேவி சுமார் 1,18,380 வாக்குகளையும் பெற்றதாக தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ. இவர், கடந்த ஏப்ரல் மாதம் இறந்ததை அடுத்து அவரது மனைவி பேபி தேவி, தும்ரி தொகுதியில் போட்டியிட்டார்.

    2004ம் ஆண்டு முதல் அந்த தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய மஹ்தோவுக்கு தனது வெற்றி 'உண்மையான அஞ்சலி' என்று அவர் குறிப்பிட்டார்.

    ×