search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhanupriya"

    14 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்தியது விவகாரம் குறித்து பானுப்பிரியாவிடம் குழந்தைகள் ஆணைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். #Bhanupriya
    சென்னை:

    நடிகை பானுப்பிரியா வீட்டில் வேலை பார்த்து வந்த சிறுமியின் தாயார் பானுப்பிரியா தன் மகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.

    பிரபாவதி என்ற பெண் ஆந்திர போலீசில் இது குறித்து புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் ஆந்திர போலீசார் பானுப்பிரியா குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் பானுப்பிரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் அந்த சிறுமியின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த சிறுமி நகை உள்ளிட்ட பொருட்களை திருடியதாக கூறப்படுகிறது. சிறுமியின் தாயார் திருடப்பட்ட பொருட்கள் தனது வீட்டில் இருப்பதாகவும், அதை எடுத்து தருவதாகவும் கூறிச் சென்றார். ஆனால் அவர் சொன்னபடி பொருட்களை ஒப்படைக்காமல் மகளை பானுப்பிரியா குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக ஆந்திர மாநில போலீசில் பொய் புகார் செய்தார்’ என்று பானுப்பிரியா தரப்பில் கூறப்பட்டது.

    அந்த சிறுமி தற்போது கெல்லீசில் உள்ள காப்பகத்தில் உள்ளார். கடந்தவாரம் அவரிடம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விசாரணை மேற்கொண்டார். விசாரணை அறிக்கை சமூக பாதுகாப்பு துறை ஆணையருக்கும், தொழிலாளர் நல ஆணையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சிறுமியை பணிக்கு அமர்த்தியது தொடர்பாக தொழிலாளர் நல ஆணையம் பானுப்பிரியா மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

    இன்று காலை முதல் நடிகை பானுப்பிரியாவிடம் குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இந்த விசாரணை நடந்து வருகிறது. 14 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்தியது பற்றி பானுப்பிரியாவிடம் விசாரித்து வருகின்றனர். #Bhanupriya
    ×