search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BCCI GM Saba Karim"

    உள்ளூர் போட்டிகள் அதிக அளவில் நடக்க இருப்பதால் சிறப்பு ஆடுகள பராமரிப்பாளர் பதவியை உருவாக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. #BCCI
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கீழ் மாநில அளவிலான கிரிக்கெட் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மாநிலங்கள் மேற்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு, மத்தி மண்டலமாக பிரிக்கப்பட்டு உள்நாட்டு தொடர்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    தற்போது லோதா கமிட்டியின் பரிந்துரைப்படி ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்குரிமை என்பதை பிசிசிஐ அமல்படுத்த இருக்கிறது. இதனால் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சில மாநிலங்கள் ரஞ்சி டிராபியில் விளையாட அனுமதி பெற்றுள்ளது. அதேபோல் பீகார் மாநில சங்கத்திற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.



    இந்த மாநிலத்தில் சர்வதேச தரத்திற்கான மைதானங்களும், ஆடுகளங்களும் கிடையாது. இதனால் கூடுதலாக ஆடுகள பராமரிப்பாளர் பதவியை உருவாக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இவர்கள் நடுநிலையான ஆடுகளத்தை தயார் செய்வதற்கு உதவிகரமாக இருப்பார்கள்.
    ×