என் மலர்
நீங்கள் தேடியது "aval ladoo"
- கிருஷ்ணருக்கு பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று.
- அவல், பொட்டுக்கடலை இரண்டையும் வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
கிருஷ்ணருக்கு பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று. பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான அவல் மற்றும் நெய் ஆகியவற்றை பயன்படுத்தி எப்படி எளிதான முறையில் சவையான அவல் லட்டு செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
அவல்-1 கப்
பொட்டுக்கடலை (உடைத்தக்கடலை)- ½ கப்
முந்திரி- 6
திராட்சை- 6
ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்
பால்- அரை கப்
சர்க்கரை- 1 கப்
நெய்- 100 கிராம்
தேங்காய் துருவல்- 2 கப்
செய்முறை
அவல், பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்து தனித்தனியே வெறுமனே வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, தேங்காய் துருவல், காய்ந்த திராட்சையை வறுத்து பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையையும் பொடித்து வைத்துக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் எல்லாவபொருட்களையும் ஒவ்வொன்றாக போட்டு ஏலப்பொடி, பால், நெய் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவில் லட்டுக்களை செய்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் கிருஷ்ணருக்கு பிடித்த அவல் லட்டுக்கள் தயார்.






