என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AV Subramanian"

    பா.ஜனதா ஆட்சியில் மெகா ஊழல் நடந்திருப்பதாக ஏ.வி.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமீபத்தில் ரூ.2 ஆயிரம் நோட்டில் 54 சதவீதம், ரூ.500 நோட்டில் 108 சதவீதம் கள்ள நோட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    2016-ல் கருப்பு பணத்தை ஒழிப்பதாகக்கூறி கொண்டுவந்த திட்டம் முழுமையாக தோல்வி அடைந்துள்ளது.  கருப்பு பணத்தை பதுக்கிவைத்திருந்த சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் மீது எவ்வழக்கும் இல்லை என விடுவித்துள்ளனர். 

    இதேபோல சென்னையில் பணியாற்றும் சித்ரா ராமகிருஷ்ணன் என்பவர் ஸ்டாக் எக்சேஞ் தகவல்களை கசியவிட்டுள்ளதாக கூறியுள்ளார். இதில் மெகா ஊழல் நடந்துள்ளது. 

    ரபேல் விமானம் வாங்கியதிலும் ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளோம். கடந்த 8 ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் ஏற்கனவே ரூ.54 லட்சம் கோடி கடன் பல மடங்காக உயர்ந்துள்ளது. 

    அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்து வருகின்றனர். தங்களுக்கு வேண்டிய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பொதுத்துறைகளை வழங்கி வருகின்றனர். 

    தற்போது பா.ஜனதா வுக்கு மீண்டும் ஆட்சிக்கு வருவோமா? என்ற பயம் வந்துள்ளது. எனவே மத துவேசத்தை உருவாக்கி ஆட்சியை கைப்பற்ற நினைத்துள்ளனர். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    • புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த அரசியல் விவகார குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவை முன்னாள் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் வழிமறித்தனர்.
    • மாநில தலைவரை ஏன் மாற்றவில்லை? என கேட்டு அவரின் காரை முற்றுகையிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த அரசியல் விவகார குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவை முன்னாள் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் வழிமறித்த–னர்.

    மாநில தலைவரை ஏன் மாற்றவில்லை? என கேட்டு அவரின் காரை முற்றுகையிட்டனர். இது–தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கருணா–நிதி, அப்துல்ரகுமான், செயலாளர்கள் சரவணன், சிவாஜி, சேவாதள துணைத்தலைவர் ஆகிய 5 பேர் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.

    இதுகுறித்து மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணி–யன் அவர்களுக்கு அனுப்பி–யுள்ள கடிதத்தில், கட்சியின் மேலிட பொறுப்பாளரை தடுத்து, அவமானப்படுத்தி, காரில் ஏறிய பின் கண்ணாடி, கதவுகள், டயர்களை சேதப்படுத்தி, மண்ணை வாரி இறைத்த நீங்கள் நடந்துகொண்ட விதம் கட்சியின் கண்ணியத்துக்க விரோதமானது.

    இவை அனைத்தும் முன்னாள் அமைச்சர்கள், பொதுமக்கள் முன்னிலை–யில் நடந்தது.

    எனவே நீங்கள் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுகிறீர்கள். ஏன் உங்களை நிரந்தரமாக நீக்கக்கூடாது? என்ற பதிலை 7 நாட்களுக்குள் கட்சி அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×