search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Auto workers union"

    • திண்டுக்கல் மணிக்கூண்டில் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    கேரளா அரசை போல் தமிழகத்தில் ஆட்டோவிற்கு இணையவழி சேவையை நலவாரியத்தின் மூலம் தொடங்கவேண்டும். எரிபொருள் உள்ளிட்ட அனைத்து விலைவாசி உயர்வுக்கேற்ப மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும்.

    ஆட்டோ தொழிலாள ர்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ காப்பீடு மற்றும் இலவச வீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி திண்டுக்கல் மணிக்கூண்டில் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை வகி த்தார். மாவட்ட செயலாளர் பாணடியன் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பிரபாகரன், தலைவர் கணேசன், பொருளாளர் தவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×