என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » asaram bapu
நீங்கள் தேடியது "Asaram bapu"
கற்பழிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு எதிராக ராஜஸ்தான் ஐகோர்ட்டில் ஆன்மிகவாதி ஆசாராம் பாபு முறையீட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். #Asaramchallengesconviction #Asarambapu
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை கற்பழித்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் கடந்த 25-4-2018 அன்று தீர்ப்பளித்தது.
இச்சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக இருந்த சரத் மற்றும் சில்பி ஆகியோருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசாராம் பாபு ஜோத்பூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நேற்று முறையீட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், ஷாஜஹான்பூர் பகுதியை சேர்ந்த அந்த சிறுமி, மத்தியப்பிரதேசம் மாநிலம், சின்ட்வாரா பகுதியில் உள்ள ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் தங்கி படித்து வந்தார்.
அங்கிருந்து ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்துக்கு வரவழைத்த ஆசாராம் பாபு, கடந்த 15-8-2013 அன்று நள்ளிரவில் சிறுமியை கற்பழித்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது நினைவிருக்கலாம். #Asaramchallengesconviction #Asarambapu
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை கற்பழித்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் கடந்த 25-4-2018 அன்று தீர்ப்பளித்தது.
இச்சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக இருந்த சரத் மற்றும் சில்பி ஆகியோருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசாராம் பாபு ஜோத்பூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நேற்று முறையீட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், ஷாஜஹான்பூர் பகுதியை சேர்ந்த அந்த சிறுமி, மத்தியப்பிரதேசம் மாநிலம், சின்ட்வாரா பகுதியில் உள்ள ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் தங்கி படித்து வந்தார்.
அங்கிருந்து ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்துக்கு வரவழைத்த ஆசாராம் பாபு, கடந்த 15-8-2013 அன்று நள்ளிரவில் சிறுமியை கற்பழித்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது நினைவிருக்கலாம். #Asaramchallengesconviction #Asarambapu
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X