என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anbazagan interview"

    • அன்பழகன் பேட்டி
    • முதல்-அமைச்சர் தேசிய மருத்துவ ஆணைய உத்தரவை அமல்படுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லுரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கல்வி கட்டணம் கடந்த ஆண்டு ரூ.3 லட்சத்து 80 ஆயிரமாக இருந்தது. இந்த ஆண்டு ரூ.5 லட்சமாக உயர்த்த முடிவு செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத் தக்கது.

    உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மாநில அரசு ஒதுக்கீட்டில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே தனியார் மருத்துவ கல்லூரிகள் வசூலிக்க வேண்டும். முதல்-அமைச்சர் தேசிய மருத்துவ ஆணைய உத்தரவை அமல்படுத்த வேண்டும்.

    மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் தி.மு.க.வினர் மக்களை ஏமாற்றி வருகின்றனர். பிற மதத்தினர் வாக்குகளை பெற இந்துக்களை பற்றி தவறாக பேசி வருகின்றனர். இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு நேர்மாறான ஒன்று. இந்து மதத்தில் சனா தனத்தை ஒழிப்பேன் என உதயநிதி பேசியதற்கு வேறு மதத்தை சேர்ந்த தி.மு.க எம்.எல்.ஏ. கென்னடி, இந்து மதத்தை விமர்சித்துள்ளார். அவர் இந்து மதத்தை குறைத்து பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    கென்னடி எம்.எல்.ஏ பதவியை பறிக்கக் கோரி கழக தேர்தல் ஆணை–யத்திடம் மனு கொடுக்கப்படும்.

    தி.மு.கவை சேர்ந்தவர்கள் அரசியல்ரீதியாக பேசுவது நல்லது. பிற மதத்தை பற்றி புண்படுத்தும் வகையில் பேசுவது தவறான ஒன்று. எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு அரசு விழா பிடிக்கவில்லை என்றால் போகக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாநில இணை செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான கணேசன், மாநில கழக துணை செயலாளர் உமா, பொருளாளர் ரவி பாண்டு–ரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்துகொண்டே சட்டசபையில் கருணா நிதியின் புகழை பாடியவர் ஓ.பன்னீர்செல்வம்.
    • அவர் எழுதிய புத்தகத்தை தனது டிரங்கு பெட்டியில் பத்திரமாக வைத்திருப்பதாக கூறினார். அவரின் மகன் ரவீந்திரநாத் எம்.பி.யை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்துகொண்டே சட்டசபையில் கருணா நிதியின் புகழை பாடியவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் எழுதிய புத்தகத்தை தனது டிரங்கு பெட்டியில் பத்திரமாக வைத்திருப்பதாக கூறினார். அவரின் மகன் ரவீந்திரநாத் எம்.பி.யை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வைத்தார்.

    தமிழக மக்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு ஸ்டாலின் செயல்படுவதாக அவர் கூறினார். தி.மு.க. என்ற தீய சக்தியை அழிப்பதற்காக எம்.ஜி.ஆர். உருவாக்கி, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க.

    தி.மு.க.வோடு கள்ள உறவு வைத்திருப்பவர்கள் அ.தி.மு.க.வில் தொடர முடியாது. கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை நடத்தவிடாமல், ஓ.பன்னீர்செல்வம் பல தடைகளை செய்தார். இவற்றை முறியடித்து பொதுக்குழு நடந்தது. உள்ளாட்சி தேர்தலில் சின்னம் பெற கையெழுத்த போட வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பினார்.

    கட்சியை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர் அனுப்பிய கடிதத்தை எடப்பாடி பழனிசாமி புறக்கணித்துவிட்டார். வரும் 11-ம் தேதி பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார்.

    என்னை பொறுத்தவரை அரசியலில் சில வியாபாரிகளை கொண்டு வந்தது மட்டும்தான் தவறு. அரசியல் முதலீடு செய்து லாபம் பெறக்கூடியது அல்ல. மேற்கு மாநிலத்தை சேர்ந்த 11 பொதுக்குழு உறுப்பினர்கள் என் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

    அதுமட்டுமின்றி முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கின்றனர். கட்சியின் தலைமைக்கு 4 பேர் போட்டியிடுகின்றனர். வெற்றி பெறுபவர்கள் தலைமையை ஏற்பேன் என கூறுவது அழகா? நான் எடப்பாடி பழனிசாமியை உறுதிபட ஆதரிக்கிறேன். அதேபோல மற்றவர்கள் யாரை ஆதரிக்கிறேன்? என சொல்வார்களா?

    மேற்கு மாநிலத்தில் 65 சதவீதத்தினர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கின்றனர். நான் ஒரே கட்சியில் 44 ஆண்டாக விசுவாசமாக பணியாற்றுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    ×