என் மலர்
நீங்கள் தேடியது "Aloe Vera Gravy"
- எல்லாருடையை வீடுகளிலும் கற்றாழை இருக்கும்.
- உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு இது நல்ல தீர்வாக இருக்கிறது.
நம் பாரம்பரியத்தில் கற்றாழையின் பயன்பாடு என்பது நீண்ட காலத்திற்கு முன்பிலிருந்தே இருந்து வருகிறது. கிராமங்களில் எல்லாருடையை வீடுகளிலும் கற்றாழை இருக்கும். வயல்களில் தானாக வளர்ந்து இருக்கும். இதில் உள்ள பல்வேறு சிறப்பு குணங்கள் காரணமாக பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு இது நல்ல தீர்வாக இருக்கிறது. இன்றைய சந்தையில், அழகுசாதன பொருட்கள், உணவு சார்ந்த பொருட்கள், உடல் எடை குறைக்க என பல்வேறு துறைகளில் சோற்றுக்கற்றாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
கற்றாழையில் இருந்து உணவு தயாரிப்பதும் எளிமையானது தான் பொதுவாக கற்றாழையின் ஜெல்லை எடுத்து அதில் ஜூஸ் தயாரித்து பருகலாம். இதுவரை நீங்கள் கற்றாழையை சரும பராமரிப்பு இதுவரை மருந்து வடிவில் பயன்படுத்துவோம். ஆனால் காய்கறிகளை போல காற்றாழையை குழம்பு, கறி, பொரியலாகவும் சமைக்கலாம்.
தேவையான பொருட்கள்:
கற்றாழை -7 வில்லைகள் (தோல் நீக்கியது)
நல்லெண்ணெய் -4 டேபிள் ஸ்பூன்
கடுகு- கால் டீஸ்பூன்
வெந்தயம்- கால் டீஸ்பூன்
சீரகம்- கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
புளி- எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம்- ஒரு கப்
பூண்டு- அரை கப்
தக்காளி- 2 (நறுக்கியது)
மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை சிறிதளவு
செய்முறை:
முதலில் சோற்றுக்கற்றாலையை எடுத்து தோலை நீக்கிவிட்டு அதனை இரண்டு மூன்று தடவை கழுவி எடுத்து வெட்டிக்கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் வாணலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, வெந்தயம், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பூண்டு நன்றாக வதங்கிய பிறகு சின்னவெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.
அதன்பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள சோற்றுக்கற்றாலைகளை சேர்க்க வேண்டும். இதில் நீர்ச்சத்து அதிகம் என்பதாள் வாணலியில் போட்டதும் தெறிக்கும். பாதுகாப்பாக செய்ய வேண்டும். பின்னர் தக்காளி சேர்க்க வேண்டும்.
பின்னர் மிளகாய்த்தூள், தனியா தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். இதில் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கினால் கற்றாலை குழம்பு தயார்.






