என் மலர்
நீங்கள் தேடியது "Air urns"
- தளா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
- ஓம் சக்தி ஓம் சக்தி என கோஷங்கள் எழுப்ப வானத்தில் கருடன் வட்டமிட விமானத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை செய்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, ஒழுகைமங்கலம் கிராமத்தில் சீதளா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கடந்த 5 ஆம் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கப்பட்டு 7-ம் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
நேற்று காலை யாகசாலை நான்காம் கால பூஜைகள் முடிவுற்று பூர்ணாகுதி மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு வேத விற்பனர்கள் கண்ணன் சிவாச்சாரியார் தலைமையில் ஓத, வானவேடிக்கையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வலம் வந்து அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களின் விமான கலசங்களை அடைந்தன.
அப்போது பக்தர்கள் ஓம் சக்தி ஓம் சக்தி என கோஷங்கள் எழுப்ப வானத்தில் கருடன் வட்டமிட விமானத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை செய்தனர்.
தொடர்ந்து கருவரையில் உள்ள அம்மன் சிலைக்கு புனித நீரை ஊற்றப்பட்டது. பின்னர் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் பரம்பரை நிர்வாக அரங்காவர் லட்சுமி நாராயணன், அறங்காவர்கள் ராகவன், பத்மநாபன், வெங்கட்ட ரெங்கராஜ், நிவேதா முருகன் எம்.எல்.ஏ. மற்றும் பேரூராட்சி தலைவர் குடும்பத்தினர்கள், இந்து சமய அறநிலைய துறையினர், கோவில் பணியாளர்கள், கிராமவாசிகள் என ஏராளமானவர்கள் கலந்துக்கொன்டு சாமி தரிசனம் செய்தனர்.






