search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Administrative Permit"

    • புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களிலும் கிராமசபை கூட்டங்களில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
    • பரந்தூர் விமான நிலையத்தை சுமார் 4,791 ஏக்கர் பரப்பளவில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புதிய விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், வளத்தூர், தண்டலம் உள்ளிட்ட 13 கிராமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பரந்தூர் விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் 400 நாட்களை தாண்டி நீடித்து வருகிறது.

    மேலும் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களிலும் கிராமசபை கூட்டங்களில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விமான நிலையம் அமைய உள்ள பகுதி நீர்நிலைகளை ஆய்வு செய்ய வந்த ஓய்வு பெற்ற அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையிலான ஐ.ஐ.டி. குழுவினரை பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கத்தினர் மற்றும் ஏகனாபுரம் கிராம மக்கள் தடுத்து நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரந்தூரை சுற்றி உள்ள கிராமங்களில் தொடர்ந்து பரபரப்பான நிலையே நீடித்து வருகிறது. இதற்கிடையே பரந்தூர் விமான நிலைய பணிக்கு மாநில அரசுக்கு நிர்வாக அனுமதியை 2 வாரத்தில் வழங்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே புதிய விமான நிலையம் தொடர்பான திட்ட அறிக்கைகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

    பரந்தூர் விமான நிலையத்தை சுமார் 4,791 ஏக்கர் பரப்பளவில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. எனவே இதற்கான நிலையங்கள் கையகப்படுத்துதல், எல்லைகள் வரையறுத்தல், விரைவில் இறுதி செய்யப்பட இருக்கிறது. நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட பின்னர் விமான நிலையத்துக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கப்படும் என்று தெரிகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பரந்தூர் விமான நிலையம் தொடர்பான விரிவான தொழில்நுட்பம்-பொருளாதார அறிக்கையை நிறைவு செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன.

    ×