search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "abandoned ammunition"

    ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தில் செப்டிக் டேங்க் கட்ட குழி தோண்டியபோது 50-க்கு மேற்பட்ட பெட்டிகளில் தோட்டாக்கள், துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Rameswaram #BulletsRecover
    ராமேஸ்வரம்:

    ராமேஸ்வரம் அருகில் உள்ள தங்கச்சிமடம் பகுதியில் இருக்கும் அந்தோனியார்புரத்தைச் சேர்ந்தவர் எடிசன். மீனவரான எடிசன் இன்று பிற்பகலில் தனது வீட்டுக்கு செப்டிக் டேங்க் கட்ட குழி தோண்டியுள்ளார். சுமார் 5 அடிகள் தோண்டியதும் அந்த பள்ளத்தில் இருந்து பழைய தோட்டாக்கள் பெட்டி பெட்டியாக கிடைத்துள்ளது. இதுகுறித்து எடிசன் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். 

    தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் குழியை மேலும் தோண்டி பழைய தோட்டாக்களைக் கைப்பற்றினர். சுமார் 50-க்கு மேற்பட்ட பெட்டிகளில் எல்.எம்.ஜி., ரக தோட்டாக்கள், ஏ.கே. 47 ரக துப்பாக்கி தோட்டாக்கள், 41 இலகுரக மெஷின்கன்கள், 22 மெஷின்கன்கள் உள்ளிட்ட பலவகையான துப்பாக்கிகள், தடை செய்யப்பட்ட வெடிபொருள்கள் ஆகியவை கிடைத்துள்ளன. 

    விசாரணையில், இந்த வகையான அனைத்து தோட்டாக்களும் 15 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. மேலும், மாவட்ட எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையே ஆயுதங்கள், தோட்டாக்கள் 15 வருடங்களுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்டு இருக்கலாம். இவற்றை தடயவியல் துறைக்கு அனுப்ப உள்ளோம். பரிசோதனைக்குப் பின்னரே முழு விவரமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
    ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தில் செப்டிக் டேங்க் கட்ட குழி தோண்டியபோது 50-க்கு மேற்பட்ட பெட்டிகளில் தோட்டாக்கள், துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Rameswaram #BulletsRecover
    ராமேஸ்வரம்:

    ராமேஸ்வரம் அருகில் உள்ள தங்கச்சிமடம் பகுதியில் இருக்கும் அந்தோனியார்புரத்தைச் சேர்ந்தவர் எடிசன். மீனவரான எடிசன் இன்று பிற்பகலில் தனது வீட்டுக்கு செப்டிக் டேங்க் கட்ட குழி தோண்டியுள்ளார். சுமார் 5 அடிகள் தோண்டியதும் அந்த பள்ளத்தில் இருந்து பழைய தோட்டாக்கள் பெட்டி பெட்டியாக கிடைத்துள்ளது. இதுகுறித்து எடிசன் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். 

    தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் குழியை மேலும் தோண்டி பழைய தோட்டாக்களைக் கைப்பற்றினர். சுமார் 50-க்கு மேற்பட்ட பெட்டிகளில் எல்.எம்.ஜி., ரக தோட்டாக்கள், ஏ.கே. 47 ரக துப்பாக்கி தோட்டாக்கள், 41 இலகுரக மெஷின்கன்கள், 22 மெஷின்கன்கள் உள்ளிட்ட பலவகையான துப்பாக்கிகள், தடை செய்யப்பட்ட வெடிபொருள்கள் ஆகியவை கிடைத்துள்ளன. 

    விசாரணையில், இந்த வகையான அனைத்து தோட்டாக்களும் 15 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. மேலும், மாவட்ட எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையே ஆயுதங்கள், தோட்டாக்கள் 15 வருடங்களுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்டு இருக்கலாம். இவற்றை தடயவியல் துறைக்கு அனுப்ப உள்ளோம். பரிசோதனைக்குப் பின்னரே முழு விவரமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
    ×